Tag: Death Sentence
முன்னாள் IGP பாதுகாப்பு செயலாளருக்கு மரண தண்டனை, இலங்கையில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற இஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களை தடுக்கத் தவறியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் பொலிஸ்மா அதிபர் IGP புஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நிரந்தர விசாரணை நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத்தின் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே கிடைத்திருந்த புலனாய்வு எச்சரிக்கைகளை உரிய முறையில் கையாளத் தவறியதாலும் தங்களது […]
ஈஸ்டர் தாக்குதல் வழக்கு, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டியே உளவுத்துறை எச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தவறியமை கடமையை அலட்சியம் செய்தமை மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் பிரியந்த லியனகே மற்றும் […]
ஈஸ்டர் தாக்குதல் மரண தண்டனை, 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு கொழும்பு நிரந்தர மூன்று நீதியரசர்கள் கொண்ட விசேட உயர்நீதிமன்றம் இன்று (31) மரண தண்டனை விதித்துள்ளது. முன்னதாக இதே வழக்கில் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளில் ஹேமசிறி பெர்னாண்டோ […]
குருநாகல் மாவட்டத்தின் வெலகெதர பகுதியில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலை மற்றும் கொலை முயற்சி சம்பவம் தொடர்பான வழக்கில் ஐந்து பேருக்கு கம்பஹா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அத்தனகல்லா வெலகெதரவைச் சேர்ந்த தாய் தந்தை மற்றும் அவர்களது இரண்டு மகன்கள் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மேல் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி நேற்று (17) இந்த தீர்ப்பை வழங்கினார். 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31ஆம் திகதி வெலகெதர […]
2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் பாடசாலையிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 18 வயது மாணவி சிவலோகநாதன் வித்யா கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தொடர்பான வழக்கில் சுவிஸ் குமார் உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (06) உறுதி செய்துள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுக்கள் […]