கொழும்பு தலவத்துகொடை சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசரமாக மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதுடன் காயமடைந்தவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீ அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் எரிவாயு கசிவே இந்த தீ விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலங்கம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













Leave a Reply