கொழும்பு வெல்லம்பிட்டிய நகரில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் இன்று (21) மாலை சுமார் 4.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவியதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு அவசர சேவைப் பிரிவினர் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கும் அதனை முழுமையாக அணைப்பதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் மற்றும் காரணம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் குறித்து பொலிஸார் மற்றும் தொடர்புடைய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







Leave a Reply