மஹமோதரில் புதிய தற்காலிக சிறைச்சாலை
நாட்டில் சிறைச்சாலை நிர்வாகத்தை வலுப்படுத்தும் நோக்கில் “மஹமோதர” என்ற பெயரில் புதிய தற்காலிக சிறைச்சாலையொன்றை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச்சட்டத்தின் (54 ஆம் அத்தியாயம்) 2 ஆம் பிரிவின் கீழ் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தமானி அறிவிப்பின்படி மஹமோதர வைத்தியசாலையின் மூடப்பட்டுள்ள ஒரு பகுதி தற்காலிக அடிப்படையில் சிறைச்சாலையாக பயன்படுத்தப்படவுள்ளதுடன் அதன் அதிகாரப் பிரதேசம் முழு […]
