மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது
நாடளாவிய ரீதியில் நேற்று (14) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மினுவாங்கொடை பொலிஸ் பிரிவின் கமன்கெதர பகுதியில் வாலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் 150 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அதேவேளை தங்கொட்டுவ பொலிஸ் பிரிவின் கெரன்வத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு சோதனையில் 67.5 லீட்டர் சட்டவிரோத மதுபானத்துடன் 44 […]
