Tag: Motorcycle Accident
மூதூரில் கோர விபத்து, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் […]
நீர்கொழும்பு கோர விபத்து, – மினுவாங்கொட வீதியின் போலவலாண பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் அதிவேகமாக பந்தயத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திரும்பிக் கொண்டிருந்த பிரைம் மூவர் (Prime Mover) வாகனத்தின் இழுவையுடன் (Trailer) மோதியதில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் நீர்கொழும்பு தாகொன்ன பகுதியைச் சேர்ந்த 18 வயதான தலிஷ நிம்னெத் சிறிவர்தன மற்றும் 19 வயதான கவிது ஹஷான் சோமதிலக்க என அடையாளம் காணப்பட்டுள்ளனர். விபத்தின் தாக்கம் மிகக் […]
Sri Lanka Road Accidents, நாடு முழுவதும் நேற்று (25) பதிவான தனித்தனி சாலை விபத்துகளில் நான்கு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலொன்ன, வெலிக்கடை, தம்புள்ளை மற்றும் புளியங்குளம் ஆகிய பகுதிகளில் இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொலொன்ன பகுதியில் கெல்ல உருபொக்கா வீதியின் தித்தலத்தென்ன பகுதியில் எதிரெதிரே பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பலத்த காயமடைந்த இருவரில் 39 வயதுடைய ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். […]
யாழ்ப்பாணம் தென்மராட்சி, கொடிகாமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட சுட்டிபுரம் பகுதியில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் வடமராட்சி பருத்தித்துறை தும்பளை பகுதியைச் சேர்ந்த சின்னராசா துளசிகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின்படி கொடிகாமத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர மின் கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இளைஞர் உடனடியாக பருத்தித்துறை ஆதார […]
அம்பாந்தோட்டை மாவட்டத்தின் ஹுங்கம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹுங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரன்ன – வீரகெட்டிய வீதியின் நூலக வீதிக்கு திரும்பும் சந்தியருகே நேற்று (20) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ரன்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த […]