ரன்ன நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துநர் முதலில் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ரன்ன கொஸ்வத்த பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




























