“முழுநாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் நுவரெலியாவில்
போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான “முழுநாடுமே ஒன்றாக” தேசியச் செயற்பாட்டின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நுவரெலியா நகரில் நடைபெறவுள்ளது. மலையக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய சமூகப் பிரச்சினைகளில் ஒன்றாக போதைப்பொருள் அச்சுறுத்தல் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைத்த விரிவான விழிப்புணர்வு பொறிமுறையின் மூலம் மக்களை இந்த அபாயத்திலிருந்து விடுவித்து அவர்களை சமூக மற்றும் பொருளாதார ரீதியாக உயர்த்துவதே இச்செயற்பாட்டின் பிரதான நோக்கமாகும். […]
