ஈரானுடனான இடைக்கால ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது – ட்ரம்ப் அறிவிப்பு
வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கடந்த மாதம் எட்டப்பட்ட இடைக்கால ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதிலடியாக அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகளைத் தாக்கியதை அடுத்து பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களைத் தாக்கியதாக ஈரான் அறிவித்துள்ளது. […]
