PTA-க்கு பதிலாக புதிய சட்டம்
தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அரசின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் ரத்து செய்யப்படும் எனக் கூறினார். […]
