சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

தற்போது அமலில் உள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்கு (PTA) பதிலாக ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்கவும் புதிய சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசின் எதிர்கால பாதுகாப்பு மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர் நீண்டகாலமாக உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வந்த பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் புதிய சட்டக் கட்டமைப்பின் கீழ் ரத்து செய்யப்படும் எனக் கூறினார்.

அதற்கு பதிலாக தற்போதைய சமூக சூழலுக்குப் பொருந்தக்கூடிய வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதோடு நாட்டின் சாதாரண மக்களின் மனித உரிமைகள், சட்டப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக சுதந்திரங்களை உறுதிப்படுத்தும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு மனித உரிமை பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்கும் இந்த சட்ட மாற்றம் நாட்டின் சட்ட அமைப்பில் முக்கியமான சீர்திருத்தமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்