சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக கொண்டு வரத் தவறினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அண்மையில் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறினார்.

மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என IMF அதிகாரிகளிடம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டி வருவதாகவும் அதனால் GSP+ சலுகை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

எனவே சமூகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

இது போன்று தேவையான முக்கிய தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள கீழுள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியினை உள்ளிட்டு சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள்