சர்வதேச சட்டங்களுக்கு இணங்கும் வகையில் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை விரைவாக கொண்டு வரத் தவறினால் இலங்கையின் GSP+ வரிச்சலுகை ஆபத்துக்குள்ளாகும் என முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுடன் அண்மையில் பயனுள்ள கலந்துரையாடல் நடைபெற்றதாகக் கூறினார்.
மக்களுக்கு வழங்கப்படும் எரிபொருள் மற்றும் பிற நிவாரணங்களை குறைக்கவோ நிறுத்தவோ அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டாம் என IMF அதிகாரிகளிடம் கோரியதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய ஒன்றியம் நீண்டகாலமாக தற்போதைய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு முரணானது என சுட்டிக்காட்டி வருவதாகவும் அதனால் GSP+ சலுகை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே சமூகத்தின் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் உள்ளடக்கிய மனித உரிமைகள் மற்றும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ப புதிய சட்டம் அவசியம் என அவர் வலியுறுத்தினார்.







Leave a Reply