தலைமன்னார் புகையிரத சேவையை மீள தொடங்க கோரிக்கை
தித்வா புயல் காரணமாக சேதமடைந்த தலைமன்னார் புகையிரத பாதையின் புனரமைப்புப் பணிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக முன்பே நிறைவடைந்திருந்தாலும் இதுவரை பயணிகள் புகையிரத சேவையை மீள ஆரம்பிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக புகையிரத நிலைய அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கடந்த ஆண்டு தித்வா புயலால் தலைமன்னார் புகையிரத பாதையின் சில பகுதிகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து சேவை இடைநிறுத்தப்பட்டதாக கூறினார். தற்போது […]
