உடல் பிடிப்பு நிலையங்கள் மீது பொலிஸ் அதிகார துஷ்பிரயோகம்
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிறுவனங்களால் சட்டபூர்வமாக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்கள் மற்றும் பயிற்சிச் சான்றிதழ்களுடன் இயங்கி வரும் உடல் பிடிப்பு நிலையங்கள் (ஸ்பா) மீது பொலிஸார் சட்டவிரோதமான முறையில் அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து வருவதாக இலங்கை உடல் பிடிப்பு நிலையங்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரின் சுற்றிவளைப்புகள் பெண் ஊழியர்கள் மீதான அத்துமீறல்கள் மற்றும் சங்கத் தலைவருக்குச் சொந்தமான நிறுவனம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக சங்கத்தின் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள பொலிஸ் தலைமையகத்திலும் இலங்கை மனித […]
