நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை
எதிர்வரும் நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவைகளை முன்னெடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூலக் கேள்வி நேரத்தில் இதனை அறிவித்த அவர் நல்லூர், மடு மற்றும் தலதா மாளிகை போன்ற புனித தலங்கள் மத வேறுபாடின்றி அனைத்து மக்களும் தரிசிக்க வேண்டிய இடங்களாக இருப்பதாக குறிப்பிட்டார். வடக்கு தொடருந்துப் பாதை முழுமையாகப் புனரமைக்கப்பட்டுள்ளதால் தற்போது தொடருந்துகள் […]
