வடதாரகை படகு மீண்டும் சேவையில்
நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து இன்று (15) முதல் மீண்டும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளது. குறிகாட்டுவான் – நெடுந்தீவு இடையே சேவையில் ஈடுபட்டு வந்த வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகிய மூன்று படகுகளும் பழுதடைந்ததால் தீவு மக்களும் பயணிகளும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருந்தனர். இதையடுத்து குறித்த படகுகளை துரிதமாக திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி வடதாரகை படகின் திருத்தப் பணிகள் நிறைவடைந்த […]
