புகைப்படம் எடுத்த மாணவர்களுக்கு நேர்ந்த கதி
பாடசாலை நேரம் முடிவடைந்த பின்னர் நண்பர்களுடன் நீர்வீழ்ச்சியைப் பார்வையிடச் சென்ற இரு மாணவர்கள் புகைப்படம் எடுக்க முயன்றபோது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினரின் தகவலின்படி 13 மற்றும் 15 வயதுடைய இரு மாணவர்களே இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். ஐந்து மாணவர்கள் அடங்கிய குழுவொன்று குறித்த நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்த நிலையில் புகைப்படம் எடுக்கும் முயற்சியின் போது இருவரும் தவறி நீர்வீழ்ச்சிக்குள் விழுந்ததாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் […]
