Tag: Tamil History
ஜூலை 5 ஆம் திகதி ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுவதுடன் ஒரு இனத்தின் வரலாறு அதன் தியாகங்களின் ஆழம் மற்றும் இலட்சியப் பற்றுறுதியின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டியதென வலியுறுத்தப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட நினைவு செய்தியில் ஒரு சமூகத்தின் வரலாற்றை வழக்கமான அளவுகோல்களால் மதிப்பிட முடியாது என்றும் சுதந்திரம், உரிமை மற்றும் இலட்சியங்களுக்காக தனிப்பட்ட வாழ்வையும் தாண்டி தன்னலமின்றி அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களே அந்த வரலாற்றின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனிதனின் இயல்பான உயிர்ப்பற்றுதலையே […]
யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆட்சிக் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்கும் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ […]
முதல் மாவீரன் தியாகி பொன் சிவகுமாரனின் 52ஆவது ஆண்டு நினைவு நாள் வவுனியாவில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. வவுனியா குருமன்காடு பகுதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில்,வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (05) நடைபெற்றது. இதனுடன் இணைந்த வகையில் வட்டுக்கோட்டை 50 எழுச்சி மாநாட்டின் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் இடம்பெற்றது. கூட்டத்தின் போது எதிர்வரும் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு வவுனியா மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள் மற்றும் ஏற்பாடுகள் தொடர்பாக […]