ஜூலை 5 ஆம் திகதி ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகக் கருதப்படுவதுடன் ஒரு இனத்தின் வரலாறு அதன் தியாகங்களின் ஆழம் மற்றும் இலட்சியப் பற்றுறுதியின் அடிப்படையில் நினைவுகூரப்பட வேண்டியதென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வெளியிடப்பட்ட நினைவு செய்தியில் ஒரு சமூகத்தின் வரலாற்றை வழக்கமான அளவுகோல்களால் மதிப்பிட முடியாது என்றும் சுதந்திரம், உரிமை மற்றும் இலட்சியங்களுக்காக தனிப்பட்ட வாழ்வையும் தாண்டி தன்னலமின்றி அர்ப்பணிக்கப்பட்ட தருணங்களே அந்த வரலாற்றின் மகத்துவத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதனின் இயல்பான உயிர்ப்பற்றுதலையே மீறி ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்தவர்களின் நினைவு தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக அமைகின்றது என்றும் அவர்களின் தியாகங்கள் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களாக என்றும் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் அந்தச் செய்தியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.










Leave a Reply