சமீபத்திய செய்திகள் | பிரான்ஸ் தமிழ் செய்திகள் | ஐரோப்பா செய்திகள் | தமிழ் செய்திகள் | இலங்கை தமிழ் செய்திகள் | விசா மற்றும் குடிவரவு | தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகங்கள் | France Visa Updates | Europe News | Tamil Latest News | Sri Lankan Tamil News | Visa & Immigration | Tech & Social Media | Nerikkalam.com

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த இரண்டாம் சங்கிலிய மன்னனின் 407ஆவது நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் மரியாதையுடன் நினைவுகூரப்பட்டது. இதனையொட்டி யாழ்ப்பாணம் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலி மன்னனின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து இரண்டாம் சங்கிலிய மன்னனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது ஆட்சிக் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் அடங்கிய கண்காட்சி அரங்கும் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மருதனார் மடம் ஆஞ்சநேயர் கோவில் ஆதீன கர்த்தா சிவஶ்ரீ சுந்தரேஸ்வரக் குருக்கள் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதி ஶ்ரீ விமலதேரர் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் யாழ் மாநகர ஆணையாளர் க. அரவிந்தராஜ் உள்ளிட்ட மதத் தலைவர்கள் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Discover more from Nerikkalam

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading