மூதூரில் கோர விபத்து பல்கலைக்கழக மாணவன் உட்பட இருவர் உயிரிழப்பு
மூதூரில் கோர விபத்து, மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் ஜின்னாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (02) மாலை இடம்பெற்ற கோர சாலை விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ரிப்பர் வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் மூதூர் கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரில் ஒருவர் பல்கலைக்கழக மாணவராகவும் […]
