நச்சு விதை உட்கொண்ட மாணவர்கள் வைத்தியசாலையில்
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் நச்சுத்தன்மை கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஆமணக்கு விதைகளை உட்கொண்டதன் காரணமாக தரம் 06-இல் கல்வி பயிலும் 22 பாடசாலை மாணவர்கள் திடீர் சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 20 மாணவர்களும் 2 மாணவிகளும் முதலில் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். ஆரம்ப சிகிச்சைகள் வழங்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அனைத்து மாணவர்களும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஆமணக்கு விதையை உட்கொண்டிருக்கலாம் […]
