இராணுவ விவசாயம் குறித்து புதிய சர்ச்சை
யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பாதுகாப்பு பிரதியமைச்சர் வலி.வடக்கில் 1,661 ஏக்கர் காணி இராணுவத் தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான இழப்பீடு காணி உரிமையாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததுடன் அந்தப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் விவசாயம் இராணுவத்தின் உள்நாட்டு தேவைகளுக்காக மட்டுமே என கூறியிருந்தார். எனினும் அந்தக் கூற்றை நிராகரித்துள்ள வலி.வடக்கு மக்கள் தங்களது […]
