குதிரைப் பந்தயத் தடத்தில் நடைபெற்ற ரேவ் நிகழ்வின்போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அந்த நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது.
உயிரிழந்த பெண் சம்பவ இடத்திலேயே இறந்தார். காயமடைந்தவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் உள்ளனர். அவர்களின் வயது 24 முதல் 27 வரை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் லேசானது முதல் கடுமையானது வரை உள்ளதாக போலீசார் கூறினர்.
சந்தேக நபரை தேடும் பணி
துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் அடையாளம் இதுவரை தெரியவில்லை. சம்பவத்திற்கான சாத்தியமான காரணமும் உறுதி செய்யப்படவில்லை.
இந்த சம்பவத்தின் சரியான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சந்தேக நபரைப் பிடிக்க போலீசார் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.
உள்ளூர் தகவல்களின்படி, அதிகாலை 02:30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இது பிரிட்டன் நேரப்படி 01:30 மணியாகும்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இரங்கல்
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த டெக்னோ நிகழ்வில் சுவிஸ் டிஜே டெகிபோ இசை நிகழ்ச்சி நடத்தினார். சம்பவத்தில் தனது நண்பரை இழந்ததாக அவர் சமூக வலைதளத்தில் தெரிவித்தார்.
“நடந்ததை இன்னும் புரிந்துகொள்ள முயன்று வருகிறேன்” என்று டெகிபோ பதிவிட்டார்.
ரேவ் நிகழ்வு “தீவிரமான சம்பவத்தால் பாதிக்கப்பட்டது” என்று ஆர்காவ் ரேசிங் கிளப் தெரிவித்தது. மீட்பு மற்றும் அவசர சேவைப் பணியாளர்களின் நடவடிக்கைக்கும் அந்த அமைப்பு நன்றி கூறியது.


































