90 நிமிடங்கள் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியாத நிலையில் கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் (90+1) Mikel Merino அடித்த அற்புதமான கோல் போட்டியின் தலைவிதியை மாற்றியது. அந்த ஒரே கோலின் மூலம் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்தத் தோல்வியால் போர்ச்சுகல் அணி உலகக் கோப்பை கனவை இழந்ததுடன் போட்டிக்கு முன்னதாகவே இது தனது கடைசி உலகக் கோப்பை என அறிவித்திருந்த Cristiano Ronaldoவின் உலகக் கோப்பை பயணமும் நிறைவுக்கு வந்தது.
இறுதி விசில் ஒலித்ததும் உணர்ச்சிவசப்பட்ட ரொனால்டோ ரசிகர்களை நோக்கி கையசைத்து கண்ணீருடன் மைதானத்தை விட்டு வெளியேறினார். பின்னர் அவர் “என்னால் முடிந்த அனைத்தையும் அணிக்காக வழங்கினேன் என் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளேன் இதுதான் கால்பந்து சில நேரங்களில் வெற்றி கிடைக்கும் சில நேரங்களில் தோல்வியை ஏற்க வேண்டி வரும். எனவே மனசாட்சிக்கு எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் இந்த உலகக் கோப்பை பயணத்திலிருந்து விடைபெறுகிறேன்” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.






























