2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் அலுவலகங்கள், புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் இந்த மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதன்படி கிராமப்புற அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகம் நாடு முழுவதும் உள்ள தொடர்புடைய நிறுவனங்களில் ஆய்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் தற்போதைய வசதிகளின் நிலை மற்றும் மேம்படுத்தப்பட வேண்டிய அம்சங்கள் அடையாளம் காணப்படவுள்ளன.
மேலும் மாற்றுத்திறனாளிகள் அணுகல் வசதிகள் தொடர்பான இந்த முயற்சிக்கு இணையாக சர்வதேச தேர்தல் முறைமைகள் அறக்கட்டளை (IFES) 17 மாவட்டங்களைச் சேர்ந்த சமூக சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோட்பாட்டு மற்றும் நடைமுறைப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.





























