Tag: Sri Lanka Development
Sri Lanka News,இலங்கையின் சுற்றுலாத்துறை வருவாய் 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026 ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கை பெற்ற வருமானம் 1,511.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 1,712.6 மில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும். மாதாந்த அடிப்படையிலும் […]
Sri Lanka News,இலங்கையின் எதிர்கால சட்டங்கள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்கள், மக்கள் தொகை மாற்றங்களையும் நம்பகமான தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதற்கான முக்கிய நடவடிக்கையாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் இலங்கை பாராளுமன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. கொழும்பில் இடம்பெற்ற இந்த ஒப்பந்தம், கொள்கை வகுப்பில் மக்கள் தொகைத் தகவல்கள், சமூக ஆதாரங்கள் மற்றும் ஆய்வு முடிவுகளை முறையாகப் பயன்படுத்தும் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாட்டில் வயோதிப மக்கள் தொகை […]
வடக்கு கடல் தீவுகளில் வாழும் ஆயிரக்கணக்கான மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நனவாகும் வகையில் நெடுந்தீவு, நயினாதீவு மற்றும் அனலைத்தீவுக்கு 24 மணி நேர மின்சாரம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.பல ஆண்டுகளாக குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே மின்சாரம் கிடைத்த இந்த தீவுப் பகுதிகளில் இனி பகல்-இரவு பாராமல் தொடர்ச்சியான மின்சார வசதி கிடைக்கவுள்ளது. இதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை, கல்வி, சுகாதாரம் மற்றும் சிறு தொழில் நடவடிக்கைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக மாணவர்கள் […]
அங்கமுவ பாலம் அமைப்பு தொடர்பான புதிய திட்டம் அரசால் முன்வைக்கப்பட்டுள்ளது. தம்புத்தேகம – ரஜாங்கணை பிரதான நெடுஞ்சாலையில் உள்ள அங்கமுவ வெள்ளநீர் வெளியேற்றப் பகுதியில் (spill) புதிய causeway பாலம் ஒன்றை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள பாதை மழைக்காலங்களில் வெள்ளநீரால் அடிக்கடி பாதிக்கப்படுவதால் போக்குவரத்து தடைகள் மற்றும் பொதுமக்களுக்கு சிரமங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனைத் தீர்க்கும் நோக்கில் அங்கமுவ பாலம் அமைப்பு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டால் தம்புத்தேகம, […]
மாற்றுத்திறனாளிகள் அணுகல் வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் தொடர்பான தேசிய அளவிலான ஆய்வு இன்று (09) மட்டக்குளியிலுள்ள செத்சிரிபாய வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு சேவைகளை வழங்கும் அரச நிறுவனங்களில் உள்ள வசதிகளை மதிப்பீடு செய்வதே இந்த ஆய்வின் பிரதான நோக்கமாகும். 2026 வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூ.1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதேச செயலாளர் அலுவலகங்கள், புகையிரத நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் சேவைகளை […]
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் குருநாகல் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட ‘பத்தினி கிராமம்’ மாதிரி கிராமம் திறந்து வைக்கப்பட்டு 24 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டன. நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கையின் வளர்ச்சிக்கும் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இந்தியா தொடர்ந்து உறுதியான பங்காளியாக இருக்கும் என தெரிவித்தார். நாடு முழுவதும் 25 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தின் 98.5 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன.