பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Laurent Nuñez தெரிவித்ததன்படி Fontainebleau பகுதியில் ஏற்பட்ட முக்கிய தீ மற்றும் அருகிலுள்ள மற்றொரு தீ சேர்த்து இதுவரை சுமார் 1,300 ஹெக்டேர் நிலப்பரப்பை எரித்துள்ளது. இந்த தீ இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த காட்டுத்தீ தொடர்பாக தீவைப்பு (Arson) சந்தேகத்தின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2026 ஆம் ஆண்டில் பிரான்ஸ் முழுவதும் காட்டுத்தீ ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2026 ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ் முழுவதும் 32,000 ஹெக்டேருக்கும் அதிகமான நிலப்பரப்பு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளது. இது 2025 ஆம் ஆண்டு முழுவதும் ஏற்பட்ட சேதத்தை விட அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போதைய கடும் வெப்ப அலை மற்றும் நீண்டகால வறட்சி நிலை தீ பரவலை மேலும் மோசமாக்கியுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Fontainebleau காடு பாரிஸுக்கு அருகிலுள்ள முக்கிய இயற்கை சுற்றுலா தளமாகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க அரண்மனை அமைந்துள்ள பகுதியாகவும் அறியப்படுகிறது. தீ பரவலை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
































