இந்த சம்பவம் France News பிரான்ஸ் மற்றும் ஐரோப்பா முழுவதும் நிலவும் வரலாறு காணாத வெப்ப அலையின் பின்னணியில் இடம்பெற்றுள்ளது. தென் பிரான்சின் பல பகுதிகளில் வெப்பநிலை 39°C முதல் 42°C வரை பதிவாகியுள்ளது. வெப்பம் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் மக்கள் தேவையற்ற வெளிப்புறச் செயல்பாடுகளைத் தவிர்க்கவும் குழந்தைகள் மற்றும் முதியவர்களை சிறப்பாகப் பாதுகாக்கவும் எச்சரித்துள்ளனர்.
பிரான்சில் கடும் வெப்பம் காருக்குள் உயிரிழந்த 2 மற்றும் 4 வயது சகோதரர்கள்
France News
பிரான்சின் தெற்கு பகுதியில் உள்ள Carpentras நகரில், கடுமையான வெப்ப அலைக்கிடையில் 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு சிறுவர்கள் குடும்பக் காருக்குள் உயிரிழந்த நிலையில் திங்கட்கிழமை (22 ஜூன் 2026) கண்டுபிடிக்கப்பட்டனர். அவசர உதவிப் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்தபோது இருவரும் இதய செயலிழந்த நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மரணத்தின் துல்லியமான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறதாலும் கடும் வெப்பம் முக்கிய காரணமாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.






























