பாதிக்கப்பட்டதாக கூறிய அயலவர் Mike Brant பாடிய “Laisse-moi t’aimer” என்ற பாடலை குறித்த நபர் 2019ஆம் ஆண்டு நீண்ட காலமாக மீண்டும் மீண்டும் ஒலிபரப்பியதாகவும் ஜன்னல் வழியாக அவமதிப்பாக திட்டியதாகவும், மேலும் அவரது சேவல்கள் அதிகாலை நேரங்களில் சத்தம் எழுப்பியதாகவும் புகார் அளித்திருந்தார். இந்த புகாருக்கு மேலும் 10 அயலவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட அயலவர் பின்னர் சுமார் 800 கிலோமீட்டர் தொலைவுக்கு குடிபெயர்ந்ததாக தெரிவிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் தனது தரப்பை விளக்கிய குறித்த நபர் “எனக்கு மிகவும் பிடித்த பாடகரின் பாடலை மட்டுமே கேட்டேன் யாரையும் தொந்தரவு செய்யும் நோக்கம் இல்லை” என்று தெரிவித்தார். அவரது வழக்கறிஞரும் இதே வாதத்தை முன்வைத்தார். France News
வழக்கை விசாரித்த நீதிமன்றம் திட்டமிட்டு தொந்தரவு செய்ததை நிரூபிக்கும் போதுமான ஆதாரம் இல்லை என்று கருதி அவரை விடுவித்தது. பின்னர் அந்த நபர் அப்பகுதியிலிருந்து வேறு இடத்திற்கு குடிபெயர்ந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் பொது சுகாதாரச் சட்டத்தின் படி ஒரு சத்தம் அதன் காலநீட்சி மீளும்மை அல்லது தீவிரம் காரணமாக அயலவர்களின் அமைதியை பாதித்தால் அது சட்டரீதியான சத்தத் தொல்லையாக கருதப்படலாம். இருப்பினும் இத்தகைய வழக்குகளில் நீதிமன்றத்தை அணுகுவதற்கு முன்பு சமரச முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது நடைமுறையாகும்.
































