இதற்கிடையில் லெய்ப்சிக் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட DHL சரக்கு விமானம் வானில் அடையாளம் காணப்படாத ஒரு பொருளுடன் மோதியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் பின்னர் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக ஹனோவர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானத்திற்கு சிறிய அளவில் சேதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விமான நிலையத்தின் சில ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டதுடன் சில விமான சேவைகளும் மாற்றி இயக்கப்பட்டன. இந்த வழக்கை ஜெர்மனியின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து விசாரித்து வருகின்றனர்.
இந்த ட்ரோன் சம்பவத்துக்கும் DHL விமானம் மோதிய மர்ம பொருளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. சம்பவத்தின் பின்னணி குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் தொடர்பு இருக்கலாம் என்ற ஊகங்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ குற்றச்சாட்டும் அல்லது உறுதிப்படுத்தலும் வெளியிடப்படவில்லை.
































