முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கை நடைமுறையை மேலும் ஒழுங்குமுறை, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமானதாக மாற்றும் நோக்கில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார். இதன் மூலம் பெற்றோர்களும் மாணவர்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களை குறைத்து அனைவருக்கும் சமமான வாய்ப்பை உறுதிப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் சமூக ஊடகப் பயன்பாட்டை கட்டுப்படுத்த அல்லது வரையறுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அரசு கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார். குழந்தைகள் இணையவழி சூழலில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் விரிவான கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.Sri Lanka News
மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய வழிகாட்டி, ஆசிரியர்களுக்கான டிஜிட்டல் திறன் பயிற்சி, இணையவழி வன்முறைகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் குழந்தைகளின் மனநலம், உடல்நலம், சமூக நலன் ஆகியவற்றை பாதுகாக்கும் தேசிய வேலைத்திட்டமும் தயாராகி வருவதாக பிரதமர் விளக்கமளித்தார்.
குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்க பல்வேறு அமைச்சுகள் மற்றும் நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பல்துறை செயல்முறையும் நடைமுறையில் உள்ளதாக அவர் தெரிவித்தார். கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைகளில் முன்னெடுக்கப்படும் இந்த மாற்றங்கள் எதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான மற்றும் தரமான சூழலை உருவாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகின்றன.































