‘நீதிக்கான நீண்ட பாதை’
“The Long Road to Justice” எனப் பெயரிடப்பட்டுள்ள இம்மாநாடு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை தொடர்பில் உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும், நீதியும் பொறுப்புக்கூறலும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைக்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் வலிந்து அல்லது விருப்பமின்றி காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான பணிக்குழுவின் சுயாதீன நிபுணரும் உறுப்பினருமான அனா லொரேனா டெல்கடில்லோ, மாநாட்டில் பிரதம விருந்தினராகப் பங்கேற்கிறார்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களது உறவினர்கள் தொடர்பான தகவல்களையும் நீதியையும் கோரி தமிழ் தாய்மார்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் முயற்சிகளின் பின்னணியில் இந்த மாநாடு நடைபெறுகிறது.





























