தமிழ்நாடு மாநிலத்திற்கு நல்லெண்ண விஜயம் மேற்கொண்டுள்ள ஹக்கீம் சென்னையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது மீனவர் பிரச்சினைகள் எழும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கச்சத்தீவு இறையாண்மை விவகாரம் குறித்து மீண்டும் விவாதிப்பது பொருத்தமான அணுகுமுறை அல்ல என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களுக்கு தீர்வாக கச்சத்தீவை இந்தியாவிடம் மீண்டும் ஒப்படைக்க இலங்கை தயாரா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் கச்சத்தீவு மீது இலங்கையின் இறையாண்மையை இந்திய அரசே சர்வதேச சட்ட அடிப்படையில் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் கச்சத்தீவின் நிலைமையை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமெனில் அது ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN) முன் எடுத்துச் செல்லப்பட வேண்டிய விடயமாகும் என்றும் இந்தியாவோ அல்லது இலங்கையோ தனிப்பட்ட முறையில் தற்போதுள்ள சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (International Maritime Boundary Line) மாற்ற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சத்தீவு இறையாண்மை விவகாரம் ஏற்கனவே சர்வதேச சட்ட கட்டமைப்பின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் எல்லை தாண்டிய மீன்பிடி மோதல்களுக்கு (Cross-border Fishing Disputes) தீர்வு காண இருநாடுகளும் பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டும் என ஹக்கீம் வலியுறுத்தினார்.
அரசியல் விவாதங்களை விட மீனவர்களின் வாழ்வாதாரம் கடல் வளங்களின் பாதுகாப்பு மற்றும் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் நடைமுறை தீர்வுகளே தற்போதைய சூழ்நிலையில் மிகவும் அவசியமானவை என்றும் அவர் தெரிவித்தார்.































