2024 ஆம் ஆண்டில் யஹ்யா சின்வார் இராணுவத் தளபதி முகமது தெய்ஃப் மற்றும் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்ட இஸ்மாயில் ஹனியே உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் உயிரிழப்புகளுக்குப் பின்னர் ஹமாஸின் போர் கால தலைமையை முன்னெடுக்க அமைக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட தலைமை மன்றத்தில் அல்-ஹய்யா முக்கிய பங்காற்றி வந்தார்.
1960 ஆம் ஆண்டு காசா பகுதியில் பிறந்த அவர், 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் இயக்கம் உருவான காலம் முதலே அதன் முக்கிய உறுப்பினராக இருந்து பல்வேறு அரசியல் மற்றும் அமைப்புச் செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த புதிய நியமனம் காசா போரின் பின்னணியில் ஹமாஸின் எதிர்கால அரசியல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
































