இந்த நோய் கற்களை வெட்டும் போது உருவாகும் நுண்ணிய சிலிகா தூசியை சுவாசிப்பதால் ஏற்படுகிறது. இங்கிலாந்தில் இதுவரை 50க்கும் மேற்பட்ட உறுதியான நோயாளிகள் மற்றும் பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக 20, 30 வயதுகளில் உள்ள இளைஞர்களே இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்படுவது மருத்துவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சில தொழிலாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மிக மோசமான சூழலில் பணியாற்றியதாகவும் “சுழற்காற்றுக்குள் இருப்பது போல தூசி நிரம்பியிருந்தது” என உயிரிழந்த தொழிலாளி ஒருவர் மரணத்திற்கு முன் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையை அடுத்து ஆஸ்திரேலியா ஏற்கனவே engineered stone பயன்பாட்டை தடை செய்த நிலையில் பிரிட்டனிலும் முழுமையான தடைக்கு கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றன.































