நெல்லியடியில் ஓய்வுபெற்ற அரச அதிகாரி ஒருவரின் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கேமரா சேதப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டைத் தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நபர்களை கைது செய்து, விசாரணைக்காக பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நாளை (31ஆம் தேதி) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணை
பாதுகாப்புக் கேமரா சேதப்படுத்தப்பட்டதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.






























