பாவெல் துரோ, ரஷ்யா டெலிகிராம் (Telegram) நிறுவனர் பாவெல் துரோவை கைது செய்வதற்கான சர்வதேச பிடியாணை உத்தரவை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டு மத்திய பாதுகாப்பு சேவை (FSB) தெரிவித்துள்ளது. ரஷ்ய குற்றச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டதாக விசாரணையில் முக்கிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவரை கைது செய்து ரஷ்யாவுக்கு நாடு கடத்துவதற்காக இன்டர்போல் உள்ளிட்ட சர்வதேச சட்ட அமலாக்க அமைப்புகள் மூலமாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் ரஷ்ய நீதிமன்றமும் அவரைக் கைது செய்ய அதிகாரப்பூர்வ பிடியாணை பிறப்பித்துள்ளதுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













Leave a Reply