அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி டிட்வா சூறாவளியால் நாடு முழுவதும் 1,328 மத வழிபாட்டுத் தலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 758 பௌத்த விகாரைகள், 272 இந்துக் கோவில்கள், 199 பள்ளிவாசல்கள் மற்றும் 99 தேவாலயங்கள் அடங்குகின்றன. இந்த நிலையில் மதத்தல மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட இடங்களை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடரப்படுகின்றன.
ஏற்கனவே புத்தசாசன நிதியம், மத்திய கலாசார நிதியம் மற்றும் அனாகரிக தர்மபால அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ரூ.800 மில்லியன் நிதியில் 178 மதத்தலங்களில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதில் ஏப்ரல் 27, 2026 அன்று அமைச்சரவை அங்கீகரித்த ரூ.200 மில்லியன் நிதியும் அடங்குகிறது.
மீதமுள்ள பாதிக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்களில் இருந்து மேலும் 90 இடங்களைத் தெரிவு செய்து புனரமைக்கும் யோசனையை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் முன்வைத்ததையடுத்து இந்த புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் சூறாவளியால் சேதமடைந்த மத மற்றும் கலாசார பாரம்பரிய இடங்களை மீட்டெடுப்பதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் மத வழிபாட்டு நடவடிக்கைகளும் வழமை நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.



























