மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பகுதியில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற இந்த பதிவுச் செயற்பாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது, கடந்த காலங்களில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் பதிவு செய்துள்ளனர்.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமையவும், மூதூர் பிரதேச செயலாளரின் ஆலோசனைக்கமைவாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்தப் பதிவுப் பணி காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.






























