சம்பூரில் காணாமல் போனோர் தொடர்பான தகவல் பதிவு நடவடிக்கை
சம்பூரில் காணாமல் போனோர், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் கடந்த காலங்களில் காணாமல் போனவர்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து ஆவணப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பகுதியில் வியாழக்கிழமை (06) நடைபெற்ற இந்த பதிவுச் செயற்பாட்டில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதன்போது, கடந்த காலங்களில் காணாமல் போன தங்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் தொடர்பான விபரங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர்கள் பதிவு செய்துள்ளனர். திருகோணமலை மாவட்ட அரசாங்க […]
