ஸ்பெயின் இளைஞர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் Sira Rego இந்த நடவடிக்கை குறித்து தகவல் வெளியிட்டுள்ளார். Ceuta-வில் உள்ள வரவேற்பு நிலையங்கள் அதிக எண்ணிக்கையிலான சிறார்களால் கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்வதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
Reuters தகவலின்படி, தற்போது சுமார் 1,342 சிறார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிறுமிகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இடமாற்ற நடவடிக்கையில் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.
Ceuta வில் சிறார்களுக்கான வசதிகள் சுமார் 90 பேரை பராமரிக்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தாலும் தற்போது சுமார் 1,100 சிறார்கள் அங்குள்ள நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தங்குமிடம் மற்றும் பராமரிப்பு வசதிகள் மீது பெரும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
எனினும் அனைத்து சிறார்களும் தானாகவே ஸ்பெயின் பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பப்பட மாட்டார்கள். ஒவ்வொரு சிறாரின் நிலையும் தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு அவர்களின் நலனுக்கு ஏற்ற முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். குடும்பத்துடன் மீண்டும் இணைக்கும் வாய்ப்பும் இதில் பரிசீலிக்கப்படும்.
மேலும், துணையற்ற சிறார்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உதவ தயாராக இருப்பதாக மொராக்கோ முன்வைத்துள்ள யோசனையையும் ஸ்பெயின் அரசு ஆராய்ந்து வருகிறது. இருப்பினும் சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் காரணமாக இடமாற்ற நடவடிக்கைகள் தாமதமடையக்கூடும்.
ஸ்பெயினில் துணையற்ற புலம்பெயர் சிறார்களை அதிக அழுத்தத்தை எதிர்கொள்ளும் Ceuta Canary Islands மற்றும் Melilla போன்ற பகுதிகளிலிருந்து மற்ற பிராந்தியங்களுக்கு மாற்றும் நடைமுறை ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. 2026 பிப்ரவரி 25 நிலவரப்படி 1,019 சிறார்கள் வேறு பிராந்தியங்களுக்கு மாற்றப்பட்டிருந்ததாக ஸ்பெயின் அரசு தெரிவித்திருந்தது.
































