Tag: குற்றச் செய்திகள்
ரெட் நோட்டீஸ் சந்தேக நபர் ஒருவர் மலேசியாவில் கைது செய்யப்பட்டு இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மலேசிய காவல்துறை மற்றும் இன்டர்போல் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் மூலம் வலன மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பிரதான சந்தேக நபர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக […]
போதைப்பொருள் சோதனைஇலங்கையின் தெரணியகல பகுதியில் போதைப்பொருள் தடுப்பு சோதனை நடவடிக்கையின் போது பொலிஸாருக்கும் சந்தேகநபர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததுடன் நான்கு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேற்கொண்ட போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டதாக ஆரம்பகட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கொழும்பு பேருந்து நிலையம் – சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சந்தேக நபர் கைது 2026 ஏப்ரல் 08 ஆம் தேதி புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பேருந்து நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் புறக்கோட்டை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர். இந்த முறைப்பாடு கொழும்பு பேருந்து நிலையம் நலன்புரி பிரிவினரால் அளிக்கப்பட்டதாகும். தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் 2026 ஏப்ரல் 11 ஆம் தேதி குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் […]