Tag: Central Bank
Crypto Rules, மெய்நிகர் சொத்துகள் (Virtual Assets) மற்றும் கிரிப்டோ (Cryptocurrency) சேவை வழங்குநர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் நேரடி (P2P) பரிவர்த்தனைகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இவை இதுவரை நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்ததால், பணமோசடி, சட்டவிரோத […]
இலங்கையில் வாகன இறக்குமதி நடைமுறைகளை எளிதாக்கும் வகையில் அரசாங்கம் உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வாகன இறக்குமதியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போதைய நிதி மற்றும் இறக்குமதி விதிமுறைகள் விற்பனையாளர்களையும் பொதுமக்களையும் பாதித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் அரோஷா ரொட்ரிகோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தற்போது அமலில் உள்ள 50% கூடுதல் வரி வாகன நிதியுதவி (Leasing) மீதான கட்டுப்பாடுகள் மற்றும் இறக்குமதி நடைமுறைகள் சந்தையின் இயல்பான செயல்பாட்டை சிரமப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.குறிப்பாக […]
இலங்கைக்கு கிடைக்கும் ஏற்றுமதி வருமானத்தின் பயன்படுத்தப்படாமல் எஞ்சியிருக்கும் தொகையை கட்டாயமாக இலங்கை ரூபாவாக மாற்ற வேண்டும் என இலங்கை மத்திய வங்கி புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு நாட்காட்டி மாதத்திலும் ஏற்றுமதியாளர்களால் பெறப்படும் ஏற்றுமதி வருமானத்தில் அங்கீகரிக்கப்பட்ட செலவுகள் மற்றும் கொடுப்பனவுகளுக்காக பயன்படுத்தப்பட்ட தொகையைத் தவிர மீதமுள்ள பணம் அடுத்த மாதத்தின் 10ஆம் திகதிக்குள் அல்லது அதற்கு முன்னர் இலங்கை ரூபாவாக மாற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருமான முகாமைத்துவத்தை மேம்படுத்துவதுடன் நாட்டின் அந்நியச் […]
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை பதவியிலிருந்து விலகுமாறு கோரி அரசாங்க ஆதரவாளர்கள் நடத்திய போராட்டம் அரசாங்கத்தின் திட்டமிட்ட அரசியல் நாடகமென சர்வஜன அதிகாரம் கட்சியின் கம்பஹா மாவட்ட முதன்மை அமைப்பாளரும் தொழிலதிபருமான ஜயந்த அத்துகோரள குற்றஞ்சாட்டியுள்ளார். கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணத் தவறிய அரசாங்கம் தனது பொறுப்பிலிருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தெரிவித்தார். கடந்த காலங்களில் தவறான பொருளாதார மற்றும் நிதி நிர்வாக நடவடிக்கைகள் […]
2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இலங்கையில் வாகன இறக்குமதி கணிசமாக அதிகரித்து 900 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் மட்டும் ரூ.195.95 பில்லியன் மதிப்பிலான வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என அதிகாரப்பூர்வ தரவுகள் குறிப்பிடுகின்றன. நீண்ட காலமாக அமலில் இருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் வாகனங்களுக்கு உள்ள தேவை திடீரென அதிகரித்ததே இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாகும். மேலும், நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் மற்றும் மக்கள் வாங்கும் திறன் […]