முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் விளக்கமறியலில்
முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) மேற்கொண்ட விசாரணையின் பேரில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (05) முன்னிலைப்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டிருந்த நான்கு அரச ஊழியர்களை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக பயன்படுத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவர்களில் […]
