Tag: corruption
சட்டவிரோத வாகனப் பதிவு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் உரிமை மாற்றம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக அத்திணைக்களத்தின் முன்னாள் முகாமைத்துவ சேவை அதிகாரி ஒருவர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதியின்றியும் உரிய சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. […]
தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாசவும் உறுப்பினராக செயல்பட்டிருந்தார். அந்த நியமனம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தவும் மேலதிக தகவல்களைப் பெறவும் அவரிடம் வாக்குமூலம் பெற […]
Sri Lanka News, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சட்ட நடவடிக்கைகளில் எந்தவித தாமதமும் இல்லை என்றும் ஏற்கனவே பலர் சிறையில் உள்ள நிலையில் மேலும் பலர் நீதிமன்றங்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் முன் நிறுத்தப்படவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் […]
முன்னாள் தென் மாகாண முதல்வர் ஷான் விஜயலால் டி சில்வா(Shan Wijayalal De Silva) அவர்களின் முன்னாள் தனிப்பட்ட செயலாளர் ஒருவர் ரூ.16.5 மில்லியன் அரச நிதி இழப்பை ஏற்படுத்தியதாக எழுந்த ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று CIABOC தெரிவித்துள்ளது. இந்த CIABOC அதிரடி கைது தொடர்பான விசாரணை அரச கொள்முதல் நடைமுறைகளில் ஏற்பட்டதாக கூறப்படும் விதிமுறை மீறல்களை மையமாகக் கொண்டு தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை தகவலின்படி தென் மாகாணத்தில் தன்னார்வ அமைப்புகளுக்காக நாற்காலிகள் […]