அந்த நியமனம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தவும் மேலதிக தகவல்களைப் பெறவும் அவரிடம் வாக்குமூலம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் சமிந்த குலரத்னவின் சேவை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நியமன செயல்முறை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாகவே இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அழைப்பாணை
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாசவும் உறுப்பினராக செயல்பட்டிருந்தார்.































