தொண்டமானாறு அச்சுவேலி வீதி புனரமைப்பில் சுகாதார நெருக்கடி
தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]
