Tag: Sajith Premadasa
தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அதிகாரப்பூர்வ அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி அவர் எதிர்வரும் 27ஆம் திகதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் சமிந்த குலரத்னவை நாடாளுமன்றத்தின் பிரதி செயலாளர் நாயகமாக நியமிப்பதற்காக அமைக்கப்பட்ட நேர்காணல் குழுவில் சஜித் பிரேமதாசவும் உறுப்பினராக செயல்பட்டிருந்தார். அந்த நியமனம் தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்தவும் மேலதிக தகவல்களைப் பெறவும் அவரிடம் வாக்குமூலம் பெற […]
எதேச்சாதிகார, சர்வாதிகார மற்றும் தனிக் கட்சி ஆட்சியற்ற உண்மையான ஜனநாயக நாட்டை உருவாக்க அரசியல் பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். “இலங்கை சிவில் சமூகங்களின் பயணப் பாதை” என்ற தொனிப்பொருளில் கொழும்பில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் திங்கட்கிழமை (6) நடைபெற்ற சிவில் சமூக அமைப்புகளின் விசேட ஒன்றுகூடலில் உரையாற்றிய அவர் ஜனநாயகத்தின் அடிப்படை விழுமியங்கள் சீர்குலைக்கப்படும் சூழலில் சிவில் சமூக அமைப்புகளும் சுதந்திர ஊடகங்களும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் […]
எல் நினோ மற்றும் லா நினா காலநிலை மாற்றங்களால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு அறிவியல் தரவுகள் ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்ட தேசிய கொள்கைகள் உருவாக்கப்படுவது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எல் நினோ மற்றும் லா நினா தொடர்பான நிபுணர்களுடனான விசேட கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இந்த காலநிலை மாற்றங்கள் விவசாயம் உணவுப் பாதுகாப்பு நீர்வளங்கள் மற்றும் […]
மக்களின் உயிரும் வாழ்வாதாரங்களும் ஆபத்தில் இருக்கும் இந்த காலகட்டத்தில், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி என்ற அரசியல் வேறுபாடுகளை மறந்து “இலங்கை” என்ற ஒரே தரப்பாக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்ற தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் காலநிலை சவால்களை எதிர்கொள்ளும் வகையில் விரிவான மூலோபாய கொள்கை முன்மொழிவுகளையும் சமர்ப்பித்தார். 2026–2027 எல் நினோ சுழற்சி கடுமையான வறட்சி […]
ஜனநாயகத்தை உச்ச நிலைக்குக் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது நீதித்துறையின் சுதந்திரத்தில் நேரடியாக தலையிட முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற சேர் பெறுமதி வரி (VAT) திருத்தச் சட்டமூல விவாதத்தில் உரையாற்றிய அவர் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்கும் முயற்சி நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்றும் தெரிவித்தார். மேல்முறையீட்டு மற்றும் உயர் நீதிமன்றங்களில் காணப்படும் வெற்றிடங்களை கடந்த ஆறு […]
இலங்கை தற்போது மிக மோசமான பொருளாதாரச் சூழ்நிலையை எதிர்நோக்கி வருவதாகவும் 2028ஆம் ஆண்டு முதல் நாட்டின் கடன் திருப்பிச் செலுத்தும் சுமை மேலும் அதிகரிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய இளைஞர் சக்தியின் கண்டி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இணக்கப்பாடு 2027 மார்ச் மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில் 2028ஆம் ஆண்டு முதல் தற்போது செலுத்தப்படும் கடன் தொகைக்கு மேலதிகமாக ஆண்டுதோறும் 2.5 முதல் 3.5 […]
இலங்கையில் பல இன பல மத மக்கள் இணைந்து வாழும் பகுதிகளில் சமூக நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்த மதத் தலைவர்களின் வழிகாட்டுதல் மிகவும் அவசியமானது என பிரதமர் Harini Amarasuriya தெரிவித்துள்ளார். அனமடுவ பகுதியில் நடைபெற்ற ராஜவன்னி மற்றும் குமாரவன்னி மாகாணங்களுக்கான பிரதம சங்கநாயக்க தேரர் பட்டம் வழங்கும் சன்னஸ் பட்டிர விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். அனமடுவையைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய தர்மகீர்த்தி ஸ்ரீ பஞ்ஞானந்த நாயக்க தேரருக்கு அதிகாரப்பூர்வ நியமன […]