September 8, 2026
Breaking News
குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை குவைத்தில் ஏர் அரேபியா விமானங்கள் வரையறுக்கப்பட்ட அட்டவணையில் தொடர்கின்றன பிரான்சின் ஆறு மாவட்டங்களில் வியாழக்கிழமை கடும் இடியுடன் மழைக்கு வாய்ப்பு பிரான்ஸ் மாணவர்களின் பிசா தேர்வு முடிவுகள் வரலாறு காணாத சரிவு ஹாரி–மேகன் அரச குடும்பப் பதவி குறித்து சார்லஸ் III விளக்கம் பிரான்ஸ் அதிபர் தேர்தல்: புருனோ ரெத்தாயோவின் எட்டு பேச்சாளர்கள் அறிவிப்பு மரணத்தை நெருங்கிய அனுபவம் குறித்து ஷரோன் ஸ்டோன் விளக்கம் PISA தரவரிசையில் ஆசிய நாடுகள் ஆதிக்கம்: பிரான்ஸ் 27வது இடம் காசிமிர் கதாபாத்திரத்தை உருவாக்கிய கலைஞர் Yves Brunier காலமானார் ட்ராய்ஸில் வீட்டுக்குள் கத்திக்குத்துக் காயங்களுடன் தம்பதி சடலமாக மீட்பு ‘தி அப்ரைசிங்’ படத்தில் இன்றைய சமுதாயத்தையும் காணலாம்: ஆண்ட்ரூ கார்ஃபீல்ட் PISA தேர்வுக்கு பிரான்ஸ் மாணவர்களும் பள்ளிகளும் எவ்வாறு தேர்வு செய்யப்படுகின்றனர்? ஜெர்மனியில் வெளிநாட்டினர் அச்சம்: சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD-க்கு சுமார் 44% வாக்குகள் சாக்சனி-அன்ஹால்ட் தேர்தலுக்குப் பின் தீவிர வலதுசாரிகளுக்கு எதிராகப் போராடும் பசுமைக் கட்சி சவுதி அரேபியாவில் ஹவுதி தாக்குதல்களுக்கு வளைகுடா நாடுகள் கண்டனம் ஹவாயை நெருங்கும் லோவெல் சூறாவளி: கனமழை எச்சரிக்கை

Tag: Government

கொமன்வெல்த் தங்கம் வென்ற ருமேஷுக்கு ஜனாதிபதி AKD வாழ்த்து

Rumesh Gold, கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்காக தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்த வீரர் ருமேஷ் பதிரணவுக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க (AKD) தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும் ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ருமேஷின் வெற்றி தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் முழு நாட்டிற்கும் பெருமை சேர்த்த தருணமாகும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பு இளம் தலைமுறைக்கு சிறந்த முன்மாதிரியாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் […]

கிரிப்டோ சொத்துகளுக்கு புதிய சட்டம் இலங்கை அரசின் முக்கிய நடவடிக்கை

Crypto Rules, மெய்நிகர் சொத்துகள் (Virtual Assets) மற்றும் கிரிப்டோ (Cryptocurrency) சேவை வழங்குநர்களை சட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்த இலங்கை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கான சட்ட ஏற்பாடுகளை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் கிரிப்டோ பரிவர்த்தனைகள் பெரும்பாலும் வெளிநாட்டு தளங்கள் மற்றும் நேரடி (P2P) பரிவர்த்தனைகள் மூலமாக நடைபெற்று வருகின்றன. இவை இதுவரை நாட்டின் ஒழுங்குமுறை அமைப்பிற்கு வெளியே செயல்பட்டு வந்ததால், பணமோசடி, சட்டவிரோத […]

அரசாங்கம் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

Sri Lanka Teacher Vacancies, இலங்கையின் கல்வித் துறையில் நிலவும் 40,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் தனியார் கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்ற பட்டதாரிகளையும் ஆசிரியர் சேவையில் இணைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். தற்போது 23,000 பேரை மட்டுமே ஆசிரியர் சேவையில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தனியார் மற்றும் அரச பல்கலைக்கழக பட்டதாரிகளை ஆசிரியர் […]

உயர் நீதிமன்ற, நீதிபதிகளின் ஓய்வு வயது நீட்டிப்பு

உயர் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை மேலும் இரண்டு ஆண்டுகள் அதிகரிக்கும் அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (27) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி தற்போது 63 ஆண்டுகளாக உள்ள மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் 65 ஆண்டுகளாக உள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதும் […]

சிறை நெரிசலுக்கு தீர்வு தேடும் அரசு மின்னணு கண்காணிப்புடன் வீட்டு காவல் சட்டம் பரிசீலனை

Sri Lanka House Arrest, இலங்கை சிறைச்சாலைகளில் நிலவும் கடுமையான நெரிசலைக் குறைக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட ரிமாண்ட் கைதிகளை மின்னணு கண்காணிப்பு (Electronic Monitoring) வசதியுடன் வீட்டு காவலில் (House Arrest) வைக்கும் புதிய சட்டத்தை அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. இதற்கான சட்ட வரைவு தயாரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது சுமார் 10,000 முதல் 11,000 கைதிகளை மட்டுமே தங்க வைக்கும் திறன் கொண்ட சிறைச்சாலைகளில் 40,000 க்கும் அதிகமான கைதிகள் […]

குழந்தை பிறப்பை ஊக்குவிக்க அரசு புதிய சலுகைகள்

இலங்கையில் கடந்த பத்தாண்டுகளில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் இன்று (13) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் 2015 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் உயிருடன் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 120,000 வரை குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன என்றார். குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்தச் சரிவு தீவிரமடைந்துள்ளதுடன் 2019-இல் பதிவான 319,010 பிறப்புகள் 2025-இல் 214,570 ஆகக் […]

அரச ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதில் மாற்றமா?

அரச துறையின் பல்வேறு தொழில்முறைப் பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் நிபுணர்களிடமிருந்து ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தொடர்ச்சியாக கிடைத்து வருவதாக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மீரிகம வைத்தியசாலையில் நேற்று (12) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர் இந்த கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தீவிரமாக பரிசீலனை மேற்கொண்டு வருவதாக கூறினார். மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம், மேல் நீதிமன்றம் உள்ளிட்ட நீதித்துறைப் பிரிவுகளிலிருந்தும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை பின்னணியில் எதிர்க்கட்சி?

நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட மோதல் சம்பவங்களுக்கும் அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் சில எதிர்க்கட்சிக் குழுக்கள் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடைபெற்று வரும் விசாரணைகளையும் சம்பவங்களின் உண்மையான பின்னணியையும் திசைதிருப்ப முயற்சித்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், சிறைச்சாலைகளுக்குள் உள்ள சில தரப்பினரும் அரசின் திட்டங்களை தடுக்கும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு […]

சிறைச்சாலை வன்முறைக்கு அரசின் அலட்சியமே காரணம்

இலங்கை சிறைச்சாலைகளில் கைதிகளின் பாதுகாப்பு கடுமையாக கேள்விக்குறியாகியுள்ளதாகவும் அரசாங்கத்தின் திட்டமிடப்படாத மற்றும் அலட்சியமான நிர்வாகமே அண்மையில் இடம்பெற்ற சிறைச்சாலை வன்முறைகள் பேரழிவாக மாறுவதற்குக் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று (09) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் முதல் நாள் ஏற்பட்ட மோதலுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட கைதிக் குழுக்களை உடனடியாகப் பிரித்திருந்தால் அடுத்த நாள் ஏற்பட்ட உயிரிழப்புகளும் பெரும் வன்முறையும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்றார். கலவரத்தின் போது சிறை அதிகாரிகள் அமைச்சரிடம் ஆலோசனை […]

தொண்டமானாறு அச்சுவேலி வீதி புனரமைப்பில் சுகாதார நெருக்கடி

தொண்டமானாறு – அச்சுவேலி வீதியின் புனரமைப்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வீதியோரங்களில் பொதுமக்கள் சட்டவிரோதமாக கொட்டும் கழிவுகளால் தாங்கள் கடும் சுகாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக வீதித் திருத்தப் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வீட்டு கழிவுகள் மட்டுமின்றி மனிதக் கழிவுகள் சிறுவர்களின் பயன்படுத்தப்பட்ட டையப்பர்கள் இறந்த மிருகங்களின் உடல்கள் மற்றும் மிருகக் கழிவுகள் போன்றவை வீதியோரங்களில் கொட்டப்படுவதால் கடுமையான துர்நாற்றம் வீசுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். கொளுத்தும் வெயிலில் நாள் முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்கள் வாந்தி மயக்கம் […]